பட்ஜெட்டால் சிறு நூற்பாலைகளுக்குப் பாதிப்பு
கோவை:
"சிறு நூற்பலைகளுக்குக் கிடைத்து வந்த லாபமே, கலால் வரிச் சலுகைதான், பட்ஜெட்டில் இதனை ரத்து செய்ததால்,சிறு நூாற்பாலைகளை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என சிஸ்பாத் தலைவர் கனகராஜ் கடும் அதிருப்திதெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் சிறு நூற்பாலைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கலால் வரிச் சலுகையை அரசு நீக்கியுள்ளது.இந்த கலால் வரிச் சலுகை ஒரு கோடி ரூபாய் வரம்பிற்குள் வர்த்தகம் செய்யும் சிறு நூற்பாலைகளுக்குஅளிக்கப்பட்டு வந்தது.
இந்த சலுகையால் தமிழகத்தில் உள்ள 496 சிறு நூற்பாலைகளில் 300 நூற்பாலைகள் பயன் பெற்று வந்தன.தற்போது இந்த சலுகை ரத்து செய்யப்பட்டு விட்டதால், இந்த நூற்பாலைகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன.
இது குறித்து தென்னிந்திய சிறு நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) தலைவர் கனகராஜ் கூறியதாவது:
தென்னிந்தியாவில் உள்ள நூற்பாலைகளில் பயன் பெற்று வந்தன. ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய் இதன் மூலம் வரிச்சலுகை கிடைத்து வந்தது. ஆனால், இப்போது பட்ஜெட்டில் இது ரத்து செய்யப்பட்டு விட்டதால், சிறுநூற்பாலைகளுக்குக் கிடைத்த மொத்த இந்த லாபத் தொகையை இழக்க வேண்டியுள்ளது. சிறு நூற்பாலைகள்ஓராண்டில் ஈட்டும் லாபம் இது மட்டுமே. இந்த சலுகை இழப்பால் மில்களை இழுத்து மூடுவத்ை தவிர வேறுவழியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications