For Daily Alerts
Just In
காஞ்சி அருகே விபத்து:18 பேர் காயம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஓடியது காரணமாக ஏற்பட்ட விபத்தில் 18 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், காஞ்சிபுரம், செய்யாறுக்கு அருகே இருக்கும் நாலமூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த வேன் கட்டுப்பாட்டைஇழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த 3 கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட 18 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த சோனம்போடு கிராம நிர்வாக அதிகாரி மனோகரன், கால்குளம் கிராம நிர்வாக அதிகாரி ரங்கநாதன். ஜமீன்புதூர் கிராம நிர்வாகஅதிகாரி
சிங்காரவேல் ஆகிய 3 பேர் உள்ளிட்ட 18 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை மாலை நடந்தது.
யு.என்.ஐ.
Story first published: Saturday, March 3, 2001, 5:30 [IST]