மகனை அரசியலுக்கு இழுக்க லல்லு முயற்சி
டெல்லி:
பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் தனது மகனைஅரசியலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
பிகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், தற்போதைய முதல்வர் ராப்ரி தேவியின் மகன் தேஜ் பிரதாப்.தற்போது தன் மகன் அரசியலில் கால் பதிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார் லல்லு.
கடந்த வாரம் தலைநகர் பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்தப்பேரணியில் தனது மகன் பிரதாப்பை இளைய இளவரசர் என்று அறிமுகப்படுத்தினார் லல்லு பிரசாத் யாதவ்.
இதையடுத்து, லல்லு பிரசாத் யாதவ் தனது மகனை அரசியலுக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்றுஅனைத்து தரப்பினரும் பேச ஆரம்பித்தனர். பத்திரிக்கைகளிலும் செய்திகள் வர ஆரம்பித்தன.
ஆனால் லல்லு என்ன சொல்கிறார்?
ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் சாதாரணமாகத்தான் என் மகன் பிரதாப் கலந்துகொண்டார். அதில் கொஞ்சம் கூட அரசியல் நோக்கம் கிடையாது. எங்கள் குடும்ப வழக்கப்படியே அவரை புதியஇளவரசர் என்று அறிமுகப்படுத்தினேன் என்று கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.