இந்திய ராணுவ ஒதுக்கீடு: பாகிஸ்தான் மிரட்சி
இஸ்லாமாபாத்:
இந்திய ராணுவத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவரான மேஜர் ஜெனரல் ரஸீத் குரோஸி, இந்தியராணுவத்தின் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை முடிந்த பின் இது தொடர்பான முடிவுஎடுக்கப்படும்.
இந்தியாவின் ராணுவ ஒதுக்கீடு எவ்வாறு பாகிஸ்தானை பாதிக்கும் என்பது பற்றியும், இப்பிராந்தியத்தில் பாகிஸ்தானின் ராணுவ பலத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.
காஷ்மீரில் சண்டை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், ராணுவ ஒதுக்கீட்டை இந்தியா அதிகரித்திருப்பது, அந்நாடு தனது பலத்தை அதிகரித்துக் கொள்ளமேற்கொண்டுள்ள நடவடிக்கை என கூறலாம்.
இந்தியாவின் இந்த நடவடிக்கையிலிருந்து இப்பிராந்தியத்தில் அமைதியின்மை நிலைக்கும் காஷ்மீர் பிரச்சனை தீராததற்கும் காரணம் யார் என்பதை உலகம்அறிந்து கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்.
கடந்த 18 மாத காலமாக காஷ்மீர் பிரச்சனை குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க முயன்று வருவதோடு, இங்கு அமைதி நிலவ பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பாகிஸ்தான் வீரர்களின் எண்ணிக்கையை எல்லைப்பகுதியில் குறைத்து அமைதி தீர்விற்கு முயன்று வருகிறது. பாகிஸ்தானின் இத்தகைய முயற்சிகளுக்கு இந்தியாஒத்துழைப்பு அளிக்காததோடு, காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்து கட்சி ஹூரியத் தலைவர்கள் பாகிஸ்தான் வர அனுமதி தரவும் மறுத்துவருகிறது.
பாகிஸ்தானிய ஜிகாதி அமைப்புகள் உள்நாட்டில் சட்ட ஒழுங்கை மீறியதால் தான் அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்