For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் அதிகரிக்கும் மின்தேவை
சென்னை:
தமிழகத்தின் மின்நுகர்வு எப்போதும் இல்லாத அளவாக 130 மெகா யூனிட்டுகள் என்ற அளவை எட்டியது.
கடந்த பிப்ரவரியில் 128 மெகா யூனிட்கள் என்ற உச்சத்தை எட்டிய மின்நுகர்வு தற்போது 130 மெகா யூனிட்டுகள் என்ற அளவை எட்டியது.
காற்றாலை, மற்றம் நீர் மின்னுற்பத்தி ஆகியவற்றை முறைப்படுத்தியதால் தமிழகத்தின் அதிகமான மின்தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவியது.
கடந்த இருமாதங்களாக அதிகபட்ச மின்தேவை ஏற்பட்டு வரும் நிலையில், கோவில்களப்பல் மற்றும் சாமளப்பட்டி மின்னுற்பத்தி நிலையங்களின் உற்பத்திதொடங்கியதை அடுத்து கோடை கால மின் தேவை சமாளிக்கப்படும் என வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்ட தமிழக மின்வாரியத்தின் செய்தி குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, March 3, 2001, 5:30 [IST]