சிங்கப்பூரில் மாரடைப்பால் தவிக்கும் இந்தியர்கள்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களுக்கு, அங்கு வாழும் சீனர்களை விட அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, பேராசிரியர் லிம் யான் லெங்க் கூறியதாவது:
இந்தியர்கள் அதிகமாக தேங்காய் எண்ணெயைப் பயன் படுத்துகிறார்கள். இதனால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாகஉள்ளது.
சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களில் 1,00,000 பேருக்கு 180 பேர் கடந்த வரும் மட்டும் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டனர். அதற்கு முந்தைய வருடம்1,00,000 பேருக்கு 160 பேர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டனர்.
ஆனால், சிங்கப்பூரில் வாழும் பிற நாட்டவர்களில் சீனர்களை எடுத்துக் கொண்டால் 1, 00,000 பேரில் 60 பேரும், மலாய் இனத்தவரை எடுத்துக்கொண்டால் 1,00,000 பேரில் 120 பேரும் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.
சிங்கப்பூரில் வாழ்பவர்களில் கடந்த வருடம் மட்டும் 2,280 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர் என்று கூறினார்.
யு.என்.ஐ.