விரைவில் 3 வது அணி குறித்து முடிவு: சுவாமி
மதுரை:
அ.தி.மு.க. தலைமையிலான அணியை விட்டு த.மா.கா. விலகி வந்தால், வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் மூப்பனார் தலைமையில் மூன்றாவது அணிஅமைக்க ஜனதா கட்சி தயாராக இருப்பதாக ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை மூப்பனாரை சந்தித்த பின் குறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் மூப்பனாரை மீண்டும் இந்த மாதம் 4-ம் தேதி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறேன். அதன் பின் த.மா.கா தலைமையில் மூன்றாவதுஅணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் ஜனதா கட்சி 30 தொகுதிகளில் போட்டியிடும்.
காங்கிரஸ் கட்சி பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்ததை குறை கூறுகிறது. காங்கிரஸ் கட்சியே விடுதலைப் புலி ஆதரவாளரான திராவிடர் கழகதலைவர் கி.வீரமணியுடன் நட்பு கொண்டிருந்தது.
எக்காரணம் கொண்டும் பாண்டிச்சேரியில் பா.ம.க. ஆட்சி அமையக் கூடாது. அவ்வாறு அமைந்தால் பாண்டிச்சேரி விடுதலைப் புலிகளின் கூடாரமாகிவிடும்.
மத்திய பட்ஜெட் மக்களுக்கு எதிரானது. சர்க்கரை, டீசல், தபால் அட்டை போன்றவற்றின் விலை ஏற்றமும், சேமிப்பு கணக்கு, வருங்கால வைப்பு நிதி(பிராவிடன்ட் பன்ட்) போன்றவற்றிற்கு வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது மத்திய தர மக்களுக்கு பாதிப்பளிக்கக்கூடியது.
மக்களுக்கு எதிரான இந்த பட்ஜெட் குறித்து ஜனதா கட்சி போராட்டம் நடத்தும்.
தலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் இருக்கும் புத்தர் சிலையை இடிப்பது போன்ற இந்திய எதிர்பு நடவடிக்கையில் ஈடுபட்டால், அந்நாட்டின் மீது அணு ஆயுததாக்குதல் உள்ளிட்ட கடுமாையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்..
இந்த விஷயத்தில் மத்திய அரசு மெளனம் சாதிப்பது வருந்தத்தக்கது.
1991-ம் ஆண்டு, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் பங்கு பெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் புத்தர் சிலையை இடிக்கக் கூடாது என தலிபான் அரசைகேட்டுக் கொள்ள அவர்களுக்கு எந்த விதமான தார்மீக உரிமையும் கிடையாது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications