கார் விபத்தில் 2 அ.தி.மு.க. தொண்டர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:
அரக்கோணத்தைச் சேர்ந்த 2 அ.தி.மு.க தொண்டர்கள் கார் விபத்தில் கொல்லப்பட்டனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், திங்கள்கிழமை காலை அ.தி.மு.க. தொண்டர்கள் இரண்டு பேர் சென்னைக்கு சென்று விட்டு திருவள்ளூர் திரும்பி வந்துகொண்டிருந்தனர். அவர்கள் வந்து கொண்டிருந்த கார் திருப்பாச்சூர் வந்த போது கட்டுப்பாடிழந்து சுவர் மீது மோதி கவிழந்தது.
இந்த சம்பவத்தில் காரில் வந்து கொண்டிருந்த இரண்டு பேரும் இறந்து போனார்கள். இறந்து போன இருவரும் முரளி பிரபாகர் மற்றும் பாபு எனஅடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
காயமடைந்த கார் ஓட்டுநர் ஷாஜஹான் திருவவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்பப்ட்டார். பின்னர் அவர் சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications