த.மா.கா, காங்கிரசை தூக்கி எறிந்தார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் பாமகவுடன் மட்டுமே இணைந்து போட்டியிடுவது என்று அதிமுக முடிவு செய்துள்ளது.
த.மா.கா., காங்கிரஸ் கட்சிகளுக்கு தனது கூட்டணியில் இடம் இல்லை என ஜெயலலிதா அறிவித்துவிட்டார்.
சென்னையில் போயஸ் தோட்டத்தில் திங்கள்கிழமை ஜெயலலிதாவுடன் கூட்டணி குறித்து பல மணி நேரம் நடந்த ஆலோசனைக்குப் பின் பா.ம.க. நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி,
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாமக வுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் 1 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாமக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து விரைவில் ஜெயலலிதா அறிவிப்பார்.
பாண்டிச்சேரியில் அதிமுகவும், பாமகவும் ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி புரியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications