கடைசி நேர ஆலோசனையில் ஜெயலலிதா
சென்னை:
தமிழகத்தில் வரும் ஏப்ரலில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்வது மற்றும் தொகுதிப்பங்கீடு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் சூடு பறக்க இறுதி கட்ட விவாதம் நடந்துவருகிறது.
அதிமுக தலைவர்கள் தம்பிதுரை, ஓ.சி.மணியன், அன்வர் ராஜா மற்றும் சுலோச்சனா சம்பத் ஆகியோர் கம்யூனிஸ்ட்கட்சிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
தற்போது மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 இடங்கள் உள்ளன. இருப்பினும்கம்யூனிஸ்ட் 20 க்கும் மேற்பட்ட தொகுதிகள் வேண்டும் என்று கேட்கிறது. ஆனால் அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதாவே 12 இடங்கள் மட்டுமே கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
சிபிஐ பொதுச் செயலாளர் நல்லகண்ணு மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சந்தித்துப் பேசிய பிறகு இறுதி முடிவுஎடுக்கப்படும் என்று தெரிகிறது.
இதே போல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 40 இடங்கள் வேண்டும் என்று கேட்கிறது. ஆனால் ஜெயலலிதாவே10 இடங்களுக்கு மேல் கொடுக்க மாட்டேன் என்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு வடதமிழகத்தில் நல்ல செல்வாக்கு இருப்பதால் வடதமிழகத்தில் பாமக வுக்கு 15இடங்களுக்கு மேல் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் தமாகா வுக்கு 30 இடங்கள் கொடுப்பதாக ஜெயலலிதா ஒத்துக் கொண்டுள்ளார்.
மூப்பனாரும் டெல்லியில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். முன்னாள்நிதியமைச்சரும், தமாகா மூத்த தலைவருமான சிதம்பரம் கூறுகையில் தமிழகத்தில் தமாகா 78 இடங்கள் கேட்கவேண்டும் என்றும் 55 க்கும் குறைவான இடங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்திவருகிறார்.
சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள பாண்டிச்சேரியில் பாமகவுக்கு அதிக இடங்கள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.இருப்பினும் ஜெயலலிதாவும், பாமக தலைவர் ராமதாசும் இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
யு.என்.ஐ.