பக்ரீத்: தலைவர்கள் வாழ்த்து
சென்னை:
முஸ்லீம்களின் திருவிழாவான பக்ரீத் பெருநாளை முன்னிட்டு தமிழக தற்காலிக கவர்னர் ரங்கராஜன், முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா மற்றும் பல தலைவர்கள் பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
கவர்னர் ரங்கராஜன் தனது பக்ரீத் வாழ்த்துச் செய்தியில், இந்தப் பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் தோழமையுடனும், சகோதரத்துவத்துடனும் இருக்கவேண்டுமென்று உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாத வகையில் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி தனது பக்ரீத் வாழ்த்துச் செய்தியில், பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் ஏழை மக்களின் நலனிற்காகப் பாடுபட வேண்டும். முகமது நபியின்கொள்கைகளை முஸ்லீம் சகோதரர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அனைவரும் தங்களது சுயநலத்தை விட்டு விட்டு ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவருல்லா, தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர்ஷேக் தாவூத் ஆகியோரும் பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.