For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரச்சனையில் இந்தியத் தூதர்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய சத்யாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டது தொடர்பாகஇந்தியத் துணைத் தூதர் மல்கோத்ரா இலங்கை பத்திரிக்கைகளில் சர்ச்சைக்குரியவராகி விட்டார்.

கண்டி டவுனில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதர் அகேல் மலகோத்ரா. இவர் எஸ்டேட் துறை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றதையடுத்து, இலங்கையில் வெளியாகும் பத்திரிக்கைகள் அனைத்திலும் இவர்சர்ச்சைக்குரியவராக இடம் பெற்று விட்டார்.

இதையடுத்து இவர் மேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து டெய்லி மிரர் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி:

கண்டி டவுனில் உள்ள ஹாட்டனில் தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தில் இந்தியத் தூதரக துணை அதிகாரிமல்கோத்ரா கலந்து கொண்டுள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகச் செயலாளர் விஜேஸ்ரிதெரிவித்துள்ளார்.

ஆனால் சிலோன் காங்கிரஸ் தொண்டர்கள் தலைவர் தொண்டமான் கூறுகையில், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் துணை தூதர்மல்கோத்ரா பங்கேற்கவில்லை. அவர் இந்தியர் என்ற முறையில் தமிழர்களாகிய நாங்கள் நடத்திய போராட்டத்தைக் காண மட்டும்தான் வந்திருந்தார்.

நாங்கள் 15 வது நாளாக நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. அவர் தனது காரை நாங்கள் போராட்டம் நடந்துகொண்டிருந்த இடத்தில் நிறுத்தி விட்டு, மேடையில் நின்று கொண்டிருந்த என்னிடம் பேச வந்தார். இதைப் பத்திரிக்கைகள் தவறாகப் புரிந்து கொண்டு அவர்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகத் தவறாக எழுதி விட்டன என்றார்.

ஆனால் மல்கோத்ரா கூறுகையில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை நான் ஒரு பார்வையாளராக நின்றுதான் பார்த்தேன்.போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

மேலும் சத்தியாகிரகப் போராட்டம் என்பது காந்திய வழி போராட்டமாகும். அதனால் அது எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து பார்க்கவந்தேன். சிலோன் தொண்டர்கள் கட்சி தலைவரைப் பார்த்துப் பேசச் சென்றேன் என்று கூறியுள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், இந்திய துணைத் தூதர் மல்கோத்ரா, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ 400 சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைக்குஆதரவு அளிக்கிறார் என்றும் டெய்லி மிரரில் செய்தி வெளியாகியுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X