மோட்டார் சைக்கிள் - பஸ் மோதல்: ஒருவர் பலி
காஞ்சிபுரம்:
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டு பேர்காயமடைந்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், திருமங்கலம் சுங்குவார் சத்திரம் அருகே சென்னையிலிருந்து எர்ணாகுளம்நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தும் சென்னையிலிருந்து சுங்குவார் சத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிவிபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக உடனடியாக ஸ்ரீபெரும் புதூர்அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
இவர்களில் இளவரசன் (45) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். மற்ற இருவரும் சென்னை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications