மோட்டார் சைக்கிள் - பஸ் மோதல்: ஒருவர் பலி
காஞ்சிபுரம்:
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டு பேர்காயமடைந்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், திருமங்கலம் சுங்குவார் சத்திரம் அருகே சென்னையிலிருந்து எர்ணாகுளம்நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தும் சென்னையிலிருந்து சுங்குவார் சத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிவிபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக உடனடியாக ஸ்ரீபெரும் புதூர்அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
இவர்களில் இளவரசன் (45) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். மற்ற இருவரும் சென்னை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்என்றனர்.
யு.என்.ஐ.