திமுக விண்ணப்பப் படிவ விற்பனை: ரூ 1.5 கோடி வசூல்
சென்னை:
தி.மு.க.வுக்கு தேர்தல் விண்ணப்பப் படிவங்கள் விற்பனை மூலமாக ரூ 1.05 கோடி வசூலாகியிருக்கிறது என அக்கட்சியின் தலைமையகத்திலிருந்துவெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிப்பதற்கான,விண்ணப்பப்படிவ விற்பனை நடைபெற்று வருகிறது.
இது பற்றி தி.மு.க. தலைமையகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பொது தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ 5,000 கொடுத்து விண்ணப்ப்படிவம் வாங்கி விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில் இது வரை3,000-க்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளர்.
பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும், ரிசர்வ் தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் விலை ரூ 2,500.
இதுவரை நடைபெற்ற விண்ணப்பப் படிவங்கள் விற்பனை மூலம் ரூ1.05 கோடி வசூலாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.