மூன்றாவது அணிக்கு மூப்பனாரை இழுக்கும் ஜாதி கட்சிகள்
சென்னை:
3-வது அணிக்குத் தலைமை தாங்குங்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாருக்கு புதிய நீதிக் கட்சித் த லைவர் ஏ.சி.சண்முகம், மக்கள் தமிழ் தேசக்கட்சித் தலைவர் கண்ணப்பனும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதேசமயம், 3-வது அணி அமைக்க வேண்டாம் என்று திராவிடர் கழகத் த லைவர் கி.வீரமணி, மூப்பனாரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்புகள் கூட்டணி குறித்து ஜெயலலிதா சார்பில் ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்புக்கு முன் நடந்தன என்பதுகுறிப்பிடத்தக்கது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை, அவரது ஆழ்வார்ப் பேட் டை வீட்டில் இந்த மூன்று தலைவர்களும்திங்கள்கிழமை தனித் தனியாகச் சந்தித்து இந்த வேண்டு கோளை விடுத்தனர்.
12.30 மணியளவில் மூப்பனாரை, வீரமணி சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் இருவரும் ஆலோசனை நடத்தினர். விவாதம் நடத்திவிட்டு வெளியே வந்த வீரமணி செய்தியாளர்களிடம், மூன்றாவது அணிக்கு அவசரப்பட்டு போய் விட வேண்டாம். அதிமுகதலைமையிலான மதச்சார்பற்ற அணியிலே யே நீடித்திருங்கள் என்று மூப்பனாரைக் கேட்டுக் கொண்டேன். எனது கருத்துக்கள்குறித்து சிந்திப்பதாக மூப்பனாரும் தெரிவித்தார்.
மூன்றாவது அணி அமையாது என்றே பலமாக நம்புகிறேன். அதற்கான வாய்ப்பு வந்து விடக் கூடாது என்பதற்காகவேமூப்பனாரை சந்தித்தேன். 3-வது அணி அமைந்து விடுமோ என்று நான் பயப்படவில் லை. எதற்கும் பயப்படும் எண்ணம்எனக்குக் கிடையாது என்றார்.
வீரமணி சென்றவுடன், ஏ.சி.சண்முகம் வந்தார். மூப்பனாரை சந்தித்து விட்டு சிரித்த முகத்துடன் வெளியே வந்த அவர்செய்தியாளர்க ளைச் சந்தித்தார். அவர்களிடம், மூன்றாவது அணிக்குத் தலைமை தாங்குங்கள் என மூப்பனாரைக் கேட்டுக்கொண்டேன்.
99 சதவீதம் அவர் 3-வது அணிக்கு வருவார் என்று நம்புகிறேன் என்றார்.
அவர் சென்ற பின் கண்ணப்பன் வந்தார். அவரும் சுமார் 30 நிமிடங்கள் வரை மூப்பனாருடன் பேசினார். பின்னர்செய்தியாளர்களிடம் கூறு கையில், 3-வது அணிக்குத் தலை மை வகிக்க மூப்பனாருக்கு அழைப்பு விடுத்தேன். பரிசீலிப்பதாகஅவர் கூறினார் என்றார்.
இவர்கள் சென்ற பின் மூப்பனார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்தபோது, வழக்கம் போல ஓரிரு வார்த்தைகளில் பதிலளித்தார். தொடர்ந்து ஆலோச னை செய்து கொண்டிருக்கிறேன். விரைவில்முடிவு தெரிவிப்பேன் என்றார்.
மூப்பனார் யோசித்துக் கொண்டும், ஆலோசித்துக் கொண்டும் இருக்க அவரை கூட்டணியில் சேர்ப்பதில்லை என ஜெயலலிதாமுடிவு செய்துவிட்டார்.












Click it and Unblock the Notifications