For Daily Alerts
Just In
தேர்தல் கூட்டணி: இன்று அறிவிக்கப்படும் ..ஜெ
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்று அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பிய ஜெயலலிதா சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு செய்து கொள்வதில் அதிமுக, தமாகா கட்சிகளிடையே தொடர்ந்து இழுபறி நீடிப்பது அனைவரும் அறிந்ததே.திங்கள்கிழமை அனைத்தும் சரி செய்யப்படும்.
24 மணி நேரம் பொறுத்திருங்கள். அனைத்து சிக்கல்களுக்கும் முடிவு தெரிந்து விடும். கூட்டணி குறித்தும் அறிவிக்கப்பட்டு விடும் என்றார் ஜெயலலிதா.
அவர் நிருபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் திங்கள் கிழமை முடிவு தெரியும் என்று கூறினார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, March 5, 2001, 5:30 [IST]