மனைவியின் கள்ளக் காதலனை வெட்டிக் கொன்ற கணவர்
சென்னை:
மனைவியின் கள்ளக் காதலனை வெட்டிக் கொன்றவர் பின்னர் போலீஸில் சரண் அ டைந்தார்.
சென்னை, தாம்பரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதன் (35). இவரது ம னைவி சித்ரா (22). இவர்களுக்கு 7 வயதில் மகளும், 6 வயதில்மகனும் உள்ளனர். வேலாயுதன் கட்டிட மேஸ்திரியாக இருந்து வந்தார்.
வேலாயுதனுக்குக் குடிப்பழக்கம் இருந்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக அவருக்கும், சித்ராவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதுவழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பும் இது போல இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இ தையடுத்து கோபித்துக் கொண்டு சித்ராநந்தம்பாக்கத்திலுள்ள தனது தாய் வீட்டுக்குக் குழந்தைகளுடன் சென்று விட்டார்.
இந்த நிலையில், வேறு ஒரு பெண்ணையும் வேலாயுதன் திருமணம் செய்து கொண்டார். அதே சமயத்தில், சித்ராவுக்கும், அவர் இருந்த பகுதியைச் சேர்ந்தமாரியப்பன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. கணவனை மறந்த சித்ரா மாரியப்பனுடன் நெருங்கிப் பழகினார். கணவன், மனைவி போலவே இருவரும்வாழத் தொடங்கினர்.
இந்த நிலையில் தனது தங்கையைப் பார்ப்பதற்காக சனிக்கிழமை நந்தம்பாக்கம் வந்தார் வேலாயுதன். அப்போது சித்ராவும், மாரியப்பனும் வாழ்க்கைநடந்தி வந்தது குறித்து அறிந்தார்.
இதனால் கோபம் கொண்ட அவர் நேராக சித்ராவின் வீட்டிற்குச் சென்றார். அப் போது மாரியப்பனும் அங்கு இருந்தார். தன்னுடன் வருமாறும்,குழந்தைகளைக் கொடுக்குமாறும் அவர் சித்ராவிடம் கேட்டுள்ளார். அதற்கு சித்ரா மறுத்தார். இதையடுத்து இருவருக்கும் வாய்ச் சண் டை ஏற்பட்டது.
அப்போது, கோபமடைந்த மாரியப்பன், தன்னிடமிருந்த அரிவாளால் வேலாயுதனை வெட்ட முயன்றார். அதைத் தடுத்து அரிவாளைப் பிடுங்கிக் கொண்டவேலாயுதன், சித்ராவையும், மாரியப்பனையும் சரமாரியாக வெட்டினார்.
இதில் மாரியப்பன் படுகாயமடைந்து இறந்தார். சித்ரா காயமடைந்தார். இருவரையும் வெட்டிய வேலாயுதன் அங்கிருந்து தப்பி பூந்தமல்லி போலீஸ்நிலையத்தில் சரண் அ டைந்தார். போலீஸார் அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.












Click it and Unblock the Notifications