மூப்பனார் குழம்ப வேண்டாம்: வன்னியர் சங்கம்
சென்னை:
3-வது அணி அமைந்தால் அது தேறாது என்று வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன் தெரிவித்தார்.
சென்னையில் நடராஜன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
3-வது அணி அமைப்பதெல்லாம் சாத்தியமில்லாத விஷயம். அப்படியே அது அமைந்தாலும் கூட அது தேறாது. இருந்தும் அமைக்க முயற்சிப்பது,தன்னையும், தன்னை நம்பி வந்தவர்களையும் கெடுப்பது போலாகும்.
3-வது அணி அமைக்கும் முயற்சியைக் கைவிட்டு விட்டு, வெற்றி பெறக் கூடிய அணிகளில் (திமுக அல்லது அதிமுக) ஒன்றில் சேருவதுதான்புத்திசாலித்தனம்.
மூப்பனார், அரசியல் பாரம்பரியம் மிக்க ஒரு தலைவர். தமிழக நலனில் ஆர்வம் மிக்க தலைவர். மக்களின் தற்போதைய மனப்போக்கைத் தெரிந்தவர்.எனவே அவர் காங்கிரசுடன் சேர்ந்து அதிமுக அணியில் தொடர வேண்டும். தேவையில்லாமல், குழம்பி, குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம்.
எங்களது அமைப்பு அதிமுக அணிக்கே ஆதரவு தரும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications