தேசிய பாதுகாப்பு சட்டத்தில் 5 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை ஆத்துப் பாலம் கொலை வழக்கில் கைதான 5 பேர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை கரும்புக்கடை சாரமேட்டைச் சேர்ந்தவர் கமது உசேன். இவரது மகன் அப்பாஸ் (23). குனியத்தூரில் உள்ள செருப்புத் தைக்கும்தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் ஆத்துப் பாலம் பகுதியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக 5 பேரை போலீசார் கை து சய்தனர். கோட்டை மேட்டைச் சேர்ந்த அபுதாஹீர், ஜியா என்ற ஜியாவுதீன், அனீபா, ஜெல்பி, பெரோஸ்ஆகிய 5 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீது தற்போது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications