இலங்கை ராணுவ வீரர்களுக்கு வயாக்ரா
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் சண்டையிட்டு வரும் ராணுவ வீரர்களுக்குத் தோன்றும் செக்ஸ் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க வயாக்ராமாத்திரைகளை வழங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
முதலில் பரிசோதனைக்காக சில ராணுவ வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வயாக்ரா மாத்திரைகள் வழங்கப்படும். பரிசோதனை வெற்றிபெற்றால் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் வயாக்ரா மாத்திரைகள் கொடுக்கப்படும் என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் வெளியிட்ட செய்தி அறிக்கை:
புலிகளுடன் மோதும் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் மருத்துவ சிகிச்சைக்கான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும். மேலும் முதுகுத்தண்டில்பிரச்சனை உள்ள ராணுவ வீரர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.
தற்போது சில ராணுவ வீரர்களைத் தேர்ந்தெடுத்து வயாக்ரா மாத்திரைகளைக் கொடுத்துப் பரிசோதித்து வருகிறோம். பரிசோதனை முடிந்த பின்திருமணமான அனைத்து ராணுவ வீரர்களுக்கும் வயாக்ரா மாத்திரைகள் கொடுக்கப்படும்.
பிட்ஸர் என்ற மருந்துப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் முதலில் ராணுவ வீரர்களுக்கு கொடுக்கும் வயாக்ரா மாத்திரைகளை இலவசமாகக்கொடுக்க ஒத்துக் கொண்டுள்ளது.
புலிகளுடன் மிகக் கடுமையாகச் சண்டையிட்ட பின் ராணுவ வீரர்களால் செக்ஸ் வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. அவர்களுக்குப் பலபிரச்சனைகள் ஏற்படுகிறது.
மொத்தம் உள்ள ராணுவ வீரர்களில் 8 ல் ஒரு பங்கு ராணுவ வீரர்கள், புலிகளால் தாக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள். அதாவது 1, 700 ராணுவவீரர்கள் ஒரு காலையோ அல்லது இரண்டு கால்களையுமோ இழந்து விட்டவர்கள்.
இவர்களுக்கு வயாக்ரா மாத்திரைகளைக் கொடுத்து அவர்களுக்கு செக்ஸ் வாழ்க்கையில் எவ்விதப் பிரச்சனையும் ஏற்படுகிறதா என்று பார்ப்போம்.இதற்காக முதலில் திருமணமான சில ராணுவ வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வயாக்ரா மாத்திரைகளைக் கொடுப்போம்.
அதற்குப்பிறகு ராணுவ வீரர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அவர்களுக்கு வயாக்ரா மாத்திரைகள் கொடுக்கப்படும். இது அவர்களது செக்ஸ்வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பே இலங்கை ராணுவ வீரர்களுக்கு வயாக்ரா மாத்திரைகள் வழங்குவதற்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒருவயாக்ரா மாத்திரை ரூ 650 என்ற விலைக்கு விற்கப்படுகிறது.
முன்னதாக, இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து 18 ஆண்டுகளாகச்சண்டை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications