அமெரிக்க வாலிபர் டெல்லியில் தற்கொலை
டெல்லி:
அமெரிக்க இளைஞர் ஒருவர் டெல்லியில் 4 மாடி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் லான்ஸ் (35) என்ற வாலிபர், ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் பழையராஜேந்திர நகரில் இருக்கும் ஒரு விருந்தினர் மாளிகையின் 4 -வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இவர் ஜனவரி மாதம் 18-ம் தேதி இந்தியா வந்தார் இவர்.
தற்கொலைச் சம்பவம் குறித்துப் போலீசார் கூறுகையில், லான்ஸ் தற்கொலை செய்து கொள்வதற்காக 4-வதுமாடியிலிருந்து குதித்த போது அருகில் இருக்கும் வீட்டின் இரும்பு கம்பி இவரது மார்பின் இடது பகுதியில்இதயத்தை குத்தி கிழித்து மரணம் சம்பவித்திருக்கிறது. இது தவிர இவரின் உடலின் வேறு எந்த பாகத்திலும் எந்தவிதமான காயமும் இல்லை.
இவரது அறையை அமெரிக்க தூதரக அதிகாரிகள் முன்னிலையில் சோதனையிட்டோம் அப்போதுதற்கொலைக்கான காரணம் குறித்து கடிதமோ, குறிப்போ காணப்படவில்லை.
லான்ஸ் பணத்தட்டுப்பாட்டில் தடுமாறியிருக்கிறார். அவரது அறையில் 1,800 ரூபாய் ( 10 அமெரிக்க டாலர்)மட்டுமே காணப்பட்டது.
இவரது உடல் லோக் நாயக் ஜெய பிராகஷ் நாராயண் மருத்துமனையின் பிரேத பரிசோதனை அறைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை திங்கள்கிழமை நடைபெறும் என்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications