அதிமுக கூட்டணியில் த.மா.கா சேருமா? சஸ்பென்ஸ் நீடிக்கிறது
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை அதிமுக கூட்டணியில் சேர்ப்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திங்கள்கிழமை பிற்பகல் வரை எந்தமுடிவையும் அறிவிக்கவில் லை.
அதிமுக கூட்டணியில் சேருவது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இன்னும் ஒரு முடிவையும் எடுக்கவில்லை. தொடர்ந்துஆலோசனை, யோசனை என இரு கட்சிகளும் இழுத்துக் கொண் ட வந்ததால், மார்ச் 1ம் தேதிக்குள் இரு கட்சிகளும் கூட்டணியில் சேருவது குறித்துமுடிவெடுக்க வேண்டும் என்று கெடு விதித்து விட்டு ஹைதராபாத்துக்கு வண்டி யேறினார் ஜெயலலிதா.
கெடு குறித்து இரு கட்சிகளும் பெரிதாக எடுத்துக் கொண்டது போலத் தெரியவில் லை. இருந்தாலும் தொடர்ந்து தினசரி தீவிர ஆலோச னைகளில் இருகட்சிகளும் ஈடுபட்டன.
இந்த நிலையில், ஜெயலலிதா ஹைதராபாத்திலிருந்து மார்ச் 1ம் தேதி திரும்பவில்லை. மாறாக 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் அவர் சென் னைதிரும்பினார். 5-ம் தேதி அவர் கூட்டணி குறித்து இறுதி முடிவு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் திங்கள்கிழமை பிற்பகல் வரை எந்த முடிவையும் ஜெயலலிதா அறிவிக்கவில்லை. அ னேகமாக செவ்வாய்க்கிழமைதான் அவர் தனதுமுடிவை அறிவிப்பார் என அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இது குறித்துத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கூட்டணி குறித்து ஜெயலலிதா இதுவ ரை எந்த முடிவும் எடுக்கவில் லை என்று தெரிவிக்கப்பட்டது.
கூட்டணிக் கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தியபிறகே தனது முடிவை ஜெயலலிதா அறிவிப்பார் எனவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வெறிச்சோடிய அதிமுக அலுவலகம்:
அதிமுக தலைமை அலுவலகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. தேர்தல் கூட்டணி குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் அலைபாய்ந்து கொண்டிருக்கும்வேளையில் அதிமுக அலுவலகத்தில் அந்தக் களேபர மே காணப்படவில்லை.
ஒரு சில தொண்டர்களே அலுவலகத்தில் காணப்படுகின்றனர். பெரிய மற்றும் இரண்டாம் மட்ட தலைவர்களைப் பார்க்க முடியவில்லை. ஜெயலலிதாபெரும்பாலும் அறிக்கைகள் மூலமே தனது அரசியலை நடத்திக் கொண்டிருப்பதால் அதிமுக அலுவலகத்தில் ஆட்களின் அளவு குறைவாகவேகாணப்படுகிறது.












Click it and Unblock the Notifications