தேர்தலுக்குத் தயாராகிறார் சுப்ரமணியம் சுவாமி
சென்னை:
தமிழக ஜனதாக் கட்சியின் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரம்,அக்கட்சியின் அகில இந்தியத் த லைவர் சுப்ரமணிய சுவாமி மற்றும் மாநிலத் தலைவர் சந்திர லேகா ஆகியோருக்குக் கொடுத்து அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழக ஜனதாக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சென் னையில் நடந்தது. கூட்டத்திற்குச் சந்திரலேகா தலைமை வகித்தார். கூட்டத்தில் இரு தலைவர்களுக்கும், யாருடன் கூட்டணி சேருவது, தனித்துப்போட்டியிடுவதா என்பது உள்ளிட்ட முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதவிர, குஜராத் பூகம்பத்தில் பலியானவர்களுக்கு இரங்கல், தமிழக மெங்கும் நிலவும் குடிநீர்ப்பிரச்சினையைத்தீர்க்க போர்க்கால நடவடிக் கையில் மாநில அரசு ஈடுபட வேண்டும், மத்திய பட் ஜெட்டைக் கண்டித்தும்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த காலங்களில் அரசியல் சலசப்பை ஏற்படுத்திய சுவாமி இப்போது சந்தடியில்லாமல் இருக்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.