மாநாடு நடத்துகிறார்கள் தெலுங்கு மக்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாடு தெலுங்கு சம்மேளனத்தின் சார்பில் சென்னையில் மாநில மாநாடு மற்றும் பேரணி திங்கள்கிழமை நடக்கிறது.
இதுகுறித்து சம்மேளன செயலாளரும்,மாநாட்டு ஒருங்கி ணைப்பாளருமான அனந்தராமன் வெளியிட்ட அறிக் கையில், தமிழ் நாட்டில் வசிக்கும் 34 சமுதாயபிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். சம்மேளனத் தலைவர் கெங்குசாமி நாயுடு மாநாட்டிற்குத் தலைமை வகிக்கிறார்.
பேரணி 2 மணிக்குத் துவங்குகிறது. அண்ணா சாலை, வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, பாரதியார் சாலை, காமராஜர் சாலை வழியாக பேரணி மெரீனாகடற்கரை சீரணி அரங்கை அடையும். பின்னர் அங்கு மாலை 6 மணிக்கு மாநாடு நடைபெறும்.
தெலுங்கு மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications