For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத் மக்களுக்கு குடியுரிமை: கனடா திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

டொரான்டோ:

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்திலிருந்து கனடாவிற்குக் குடிபெயர விண்ணப்பித்துள்ள 1,000 பேரின் விண்ணப்பப் படிவங்கள் விரைவில்பரிசீலிக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது.

இதுகுறித்து கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் கார்கியானிஸ் கூறியதாவது:

இந்தியாவிலிருந்து கனடாவிற்கு குடிபெயர பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திலிருந்து 1000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதைஇந்தியாவிற்கான கனடா தூதர் பீட்டர் சுதர்லான்ட் பரிசீலித்து வருகிறார்.

நான் கடந்த வாரம் டெல்லி மற்றும் குஜராத் ஆகிய நகரங்களுக்குச் சென்றிருந்தேன்.

குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கனடாவிற்கு வருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கனடா ஏற்கனவேஅறிவித்திருந்தது.

மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத் தொடக்கத்திலோ குஜராத்திலிருந்து கனடாவிற்கு குடிபெயர விண்ணப்பித்துள்ளவர்களுக்கு விசா வழங்கஅனைத்து ஏற்பாடுகளையும் கனடா செய்து கொடுக்கும். குஜராத்திலிருந்து விண்ணபித்துள்ள 1,000 பேருக்கும் கனடாவில் குடியுரிமை அளிக்கப்படும்.

குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்து தவிக்கும் இரண்டு பச்சிளங் குழந்தைகளுக்கு முதலில் விசாவழங்க ஏற்பாடு செய்யப்படும்.

முன்னதாக, கனடா பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநில மக்களுக்காக 10 மில்லியன் டாலர்கள் கொடுத்துள்ளது என்பது அனைவருக்கும்தெரியும்.

குஜராத்துக்கு மேலும் நிவாரண நிதி வழங்குவது குறித்து கனடா பரிசீலிக்கும் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X