ரயில் நிலையக் கொள்ளை .. .1000 பேரிடம் விசார ணை
சென்னை:
சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை 1,000 பேரிடம் விசாரணைநடந்துள்ளதாக ரயில்வே போலீஸ் ஐ.ஜி. திலகவதி கூறியுள்ளார்.
மாம்பல் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தில் சனிக்கிழமை இரவு ஆயுதங்களுடன் புகுந்த 3 பேர் கும்பல்அங்கிருந்த அலுவலர்கள், காவலர்களைத் தாக்கிவிட்டு ரூ. 9.3 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது.
பரபரப்பான மாம்பலம் ரயில் நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பெட்ரோல் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விசாரிக்க 6 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. விசாரணை குறித்து திலகவதி கூறுகையில், இதுவரை 1,000பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து விடு வோம் என்றார்.
இதற்கிடை யே, சம்பவம் நடந்த இடத்திலிருந்து குற்றவாளி ஒருவரின் கைரேகை கிடைத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அசோக்நகரைச் சேர்ந்த பழைய குற்றவாளி ஒருவரின் கைரேகையுடன் இது ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டதாகவும், அந்த நபரைத் தேடும்பணி தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications