இந்து கோயில்களை பராமரிக்க வி.எச்.பி.கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
இந்து கோயில்களை பராமரிக்கும் உரிமையை மத குருமார்கள், ஆன்மிக தலைவர்கள் அடங்கிய தன்னாட்சிகொண்ட தனியார் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழக பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில பொதுச் செயலாளர் கோபால கிருஷ்ணனும், அமைப்பு செயலாளர்விஸ்வநாதனும் நிருபர்களிடம் கூறுகையில், பசுவதையை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு தடைசட்டம் கொண்டு வர வேண்டும்.
மாநில அரசு மதமாற்றத்தை தடை செய்யும் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். விஸ்வ ஹிந்து நிறுவனர் அசோக்சின்ஹாலின் பவழ விழா (அமிர்த மஹோத்சவம்) செப்டம்பர் மாதம் 2-ம் தேதி நடை பெறவுள்ளது. விஸ்வ ஹிந்துபரிஷத்தின் மாநில மாநாடும் அன்றைய தினம் நடைபெறும்.
சின்ஹாலுக்கு சேவை நிதியாக ரூ 51 லட்சம் கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications