குமரி அனந்தனின் புதுக்கட்சி உதயம்
சென்னை:
காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் தொண்டர் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்காக கடுமையாக உழைத்தேன். ஆனால் அவர்கள் என்னைஅங்கீகரிக்கவில்லை. ஒரு பொறுப்பும் தரவில்லை. தலைவர்கள் குறைந்த கட்சியாக காங்கிரஸ் கட்சிமாறி விட்டது.
தொண்டர்களை அவர்கள் மதிப்பதில்லை. எனவே தொண்டர்களின் நலனுக்காக இந்தக் கட்சியைத் துவக்கியுள்ளேன்.
ஜாதி பூசலற்ற, நல்லிணக்கத்தை வளர்த்தல், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பைப் பெருக்குதல் போன்ற கொள்கைகளை உடையது எங்கள் கட்சி. அதாவதுகாந்தி காமராஜர் கண்ட கனவை நினைவாக்குவதே எங்கள் குறிக்கோள்.
தேர்தல் கூட்டணி குறித்து புதன்கிழமை நடக்கும் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்வோம் என்றார் குமரி அனந்தன்.
கட்சியின் கொடி காவி, பச்சை, வெள்ளை நிறத்திலுள்ளது. நடுவில் காந்தி, காமராஜர் படங்கள் உள்ளன. தொண்டர் காங்கிரஸ் என்ற பெயரும்பொறிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications