துப்பாக்கி வைத்திருந்த மாணவர் கைது
Subscribe to Oneindia Tamil
பிலடெல்பியா:
பிலடெல்பியாவில் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்திருந்த 9 வயது மாணவரைப் போலீசார் கைது செய்தனர்.
சான் டைகோ வில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவர், சக மாணவர்கள் இரண்டு பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதையடுத்து, துப்பாக்கியுடன்பள்ளிக்கு வந்திருந்த 9 வயது மாணவரைப் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, சமூக சேவகர்கள் சிலரும், சம்பந்தப்பட்ட போலீசார் சிலரும் கேட்டுக் கொண்டதன் பேரில் கைது செய்யப்பட்ட மாணவர் விடுவிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்துப் போலீசார் கூறுகையில், பிலடெல்பியாவில் உள்ள லீ ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மாணவர் .9 எம்.எம்.துப்பாக்கியுடன் பள்ளிக்குவந்தது மட்டுமின்றி பள்ளியில் படிக்கும் சக மாணவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார்.
இதையடுத்து, நாங்கள் அங்கு விரைந்து சென்று அந்த மாணவரைக் கைது செய்தோம் என்றனர்.












Click it and Unblock the Notifications