பக்ரீத் பண்டிகை: குதூகலத்தில் இந்திய மக்கள்
மும்பை:
இந்தியாவில் முஸ்லீம்கள் வசிக்கும் அனைத்து ஊர்களிலும் முஸ்லீம் இன மக்கள் புத்தாடை அணிந்து, பாரம்பரிய தலைப்பாகை அணிந்து பக்ரீத் பண்டிகைகொண்டாடினார்கள்.
மும்பையில் வாழும் முஸ்லீம்கள் அதிகாலையில் எழுந்து பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகை நடத்தினார்கள். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத்வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டார்கள்.
ஜாதி, இன, மத வேறுபாடுகளை மறந்து அனைத்து இன மக்களும் பக்ரீத் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள் என்பது சந்தோஷப்பட வைத்தவிஷயம்.
இஸ்லாமிய முறைப்படி, இஸ்லாமிய மாதமான துல் ஹிஜா மாதத்தின் 10 ம் தேதி பக்ரீத் பெருவிழா கொண்டாடப்படும். அல்லாவுக்கு நன்றி சொல்லும்விதமாக பக்ரீத் பெருவிழா கொண்டாடப்படுகிறது.
மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூர், கல்கத்தா உள்பட முஸ்லீம்கள் வாழும் அனைத்து நகரங்களிலும், ஊர்களிலும் பக்ரீத் பெருவிழா கோலாகலமாகக்கொண்டாடப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications