நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து: 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை:
நிலக்கரிச் சுரங்கத்தில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 6 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரையடுத்துள்ள ரயத்வாரி - துர்காபூர் அருகேயுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணிக்குஇந்த சம்பவம் ஏற்பட்டது.
உயிரிழந்தவர்களில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு பேரின் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
முன்னதாக, ஜார்க்கன்ட் மாநிலத்தில் உள்ள பாக்டியா நிலக்கரிச் சுரங்கத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தில் 25 க்கும் மேற்பட்ட சுரங்கத்தொழிலாளர்கள் இறந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications