நீலகிரியில் மர்மமாக இறந்த பெண்யானை

Subscribe to Oneindia Tamil

கூடலூர்:

நீலகிரி வனப்பகுதியில் பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த யானை எப்படி இறந்தது என்பது குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. நீலகிரி வனப்பகுதியில் அதிகளவில் யானை, மான், காட்டெருமை, புலி,சிறுத்தை ஆகிய வனவிலங்குகளும், அரிய வகைப் பறவைகளும் உள்ளது.

இவற்றில் மூன்று யானைகள் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளன என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மசினகுடி அருகேயுள்ள சிங்காரா பகுதியில் தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட்டில் ஒரு யானை இறந்து கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மிகவும்அழுகிய நிலையில் அந்த யானை கிடந்ததால் அது இறந்து 25 நாட்களுக்கும் மேலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதனால் யானை இறந்ததற்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறார்கள். அதன் முக்கிய உடல் உறுப்புக்களை பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.இந்த யானை விஷத்தாலோ அல்லது மின்சாரம் தாக்கியோ இறந்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுவனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+