இடிபாடுகளில் சிக்கி 35 ஹஜ் பயணிகள் பலி

Subscribe to Oneindia Tamil

ஜமராத்:

சவுதி அரேபியாவில் இடிபாடுகளில் சிக்கி ஹஜ் பயணிகள் 35 பேர் பலியானார்கள். அவர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்.

இந்தியா உள்பட 160 நாடுகளைச் சேர்ந்த 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் ஹஜ் புனிதப் பயணமாக சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்குச்சென்றுள்ளனர்.

இவர்கள் மெக்கா அருகேயுல்ள அராபத் மலையடிவாரத்தில் தொழுகை நடத்திய பின் அங்கிருந்து மினா என்ற இடத்திற்குச் சென்றார்கள். அப்போதுஜமராத் பாலத்தில் கூட்டநெரிசல் மிக அதிகமாக இருந்தது.

ஒருவருக்கொருவர் மோதியதில் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கியும், இடிபாடுகளில் சிக்கியும் 35 பேர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர்.

இவர்களில் 12 பேர் ஆண்கள். 23 பேர் பெண்கள். உடனடியாகப் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் சடலங்களைஅப்புறப்படுத்தினர்.

கடந்த 1998 ம் ஆண்டில் இதே இடத்தில் நெரிசலில் சிக்கி போலீசார் சிலர் உள்பட 119 பேர் பலியானார்கள்.

1997 ம் ஆண்டு மினாவில் ஹஜ் பயணிகள் தங்கி இருந்த கூடாரங்களில் தீப்பற்றிக் கொண்டதில் 343 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+