விரைவில் முடிவெடுங்கள்: த.மா.கா.வுக்கு ஜெ.கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jayalalithaஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, த.மா.கா.வும், காங்கிரசும் கூட்டணி குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் எந்த காலக்கெடுவும் விதிக்கவில்லை.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், பாண்டிச்சேரியில் பா.ம.க.வுடன் பதவி பங்கீடு என்பதை ஒப்புக்கொள்ள முடியாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் கூறியது பற்றி நான் எந்த விதமான கருத்தும் கூற விரும்பவில்லை.

கூட்டணி குறித்து த.மா.கா. தலைவருடன் பேச்ச வார்த்தை நடத்தி வருகிறேன். தமிழகத்தில் மூன்றாவது அணி சாத்தியமானது அல்ல.

காங்கிரசை விட்டு வருமாறு நான் மூப்பனாரிடம் கூறியதாக பத்திரிக்கைகளில் வந்த செய்திகள் தவறானவை. எங்கள் கட்சி அது போன்ற செய்கைகளில்ஒரு போதும் ஈடுபடாது.

த.மா.கா.வுக்கும், காங்கிரசுக்கும் சேர்த்து 45 தொகுதிகள் கொடுக்கப்படும். அவர்கள் தங்களுக்குள் அதை பிரித்துக் கொள்ள வேண்டும். அதுஅவர்கள் பொறுப்பு.

மதசார்பற்ற கூட்டணியில், கூட்டணி குறித்த உடன்பாடு ஏற்படுவதில் தாமதமாவதற்கு மற்ற கட்சிகள் தான் காரணம். இதன் காரணமாக கட்சிதொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். இப்போது கூட்டணி குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதால் மீண்டும் புத்துணர்சி பெற்றுள்ளனர்.

த.மா.கா.வுடனான தேர்தல் கூட்டணி குறித்த கதவுகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன என கூறிய தி.மு.க.தலைவர் கருணாநிதி, மீண்டும் த.மா.கா.வைதி.மு.க. கூட்டணிக்கு அழைப்பது அவருக்கு ஸ்திரத்தன்மை இல்லை என்பதை காட்டுகிறது. அது தேர்தல் குறித்து அவர் மனதில் எழுந்துள்ள அச்சத்தையும்காட்டுகிறது.

பாண்டிச்சேரியில் இரண்டரை ஆண்டு ஆட்சி என்ற சுழற்சி முறை ஆட்சியில் எந்த விதமான மறு பேச்சுக்கே இடமில்லை.

பா.ம.கா.வுக்கு தமிழகத்தில் 27 தொகுதிகளும், பாண்டிச்சேரியில் 10 தொகுதிகளும் அக் கட்சிக்கு இருக்கம் வெற்றி வாய்ப்பின் அடிப்படையை கருத்தில்கொண்டுதான் ஒதுக்கப்பட்டது.

பாண்டிச்சேரியில் முதல்வர் பதவியை தியாகம் செய்ய முடியாது என காங்கிரஸ் கூறுகிறது. 1996-ம் ஆண்டுக்கு பின் பாண்டிச்சேரியில் காங்கிரசால் ஆட்சிஅமைக்க முடியவில்லை.

தி.மு.க., த.மா.கா. உறவு முறிந்த பின்புதான் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அதிலும் த.மா.கா. ஆட்சியில் பங்கு வகிக்க அ.தி.மு.க. வெளியில் இருந்துஆதரவு தருவதால்தான் அதுவும் சாத்தியமானது.

பாண்டிச்சேரியில் எந்த கட்சியும் முதல்வர் பதவி வேண்டும் என உரிமை கோர முடியாது.

தேர்தல் கூட்டணி பற்றிய பேச்சு வார்த்தை குறித்து பத்திரிக்கைகளில் பல தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது மதசார்பற்ற கூட்டணியில்சுமுகமாக நடந்து வரும் பேச்சு வார்த்தையை பாதிக்கும் நோக்கத்தில் பரப்பப்படும் தவறான கருத்து.

கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிவடைந்த பின், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். மற்ற கூட்டணிகட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என இப்போது கூற இயலாது என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+