கஞ்சா செடி பயிரிட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை அருகே சமவெளிப் பகுதியில் கஞ்சா செடி பயிரிட்டவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டம், பல்லடம் தாலூகாவில் பொல்லிக்காளிபாளையத்தில் விவசாயம் செய்து வருபவர் குப்புசாமி.இவர் தனது சொந்த நிலத்தில் 5 ஏக்கர் நிலப் பரப்பில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலப்பரப்பில் இருந்த கஞ்சா செடிகளைப் போலீசார் கண்டு பிடித்து அழித்தனர். மேலும் குப்புசாமியைக்கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரை குண்டர் சட்டத்தில் ஓராண்டு காலம் சிறையில் வைக்க மாவட்டகலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications