தி.மு.க வுக்கே மக்கள் ஆதரவு .. கருணாநிதி
சென்னை:
இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக திருச்சி மற்றும் சேலம் சென்று விட்டு திங்கள்கிழமை சென்னை திரும்பியதமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி மக்கள் ஆதரவு தி.மு.க தலைமையிலான அணிக்கேஇருக்கிறது என கூறியுள்ளார்.
கருணாநிதி நிருபர்களிடம் கூறுகையில், மக்கள் தி.மு.க.வதைத்தான் ஆதரிக்கிறார்கள். வரவிருக்கும் தமிழகசட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணிதான் வெற்றி பெறும். தி.மு.க. சார்பில் போட்டியிடவிரும்புவோர் விண்ணப்பிப்பதற்கான நேரம் திங்கள்கிழமையோடு முடிவடைந்தது.
இது 5.500 பேர் தி.மு.க. சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பப்படிவ விற்பனை மூலம் ரூ 2கோடி வசூலாகியுள்ளது.
சென்னை நகர மேயர் ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என கூறப்படுவதால் அவருக்கு சிறப்பு பாதுகாப்புஏதும் அளிக்கப்படவில்லை. கறுப்பு பூனைப் படை என்பது போன்ற ஆடம்பரங்கள் எங்களுக்கு பிடிக்காது.
தி.மு.க.வில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்திருப்பது சென்னை மேயரின் கரத்தைவலுப்படுத்துவதற்தாக என கூறப்படுகிறது. இது செய்திகள், கேள்விகளுக்கெல்லாம் நான் பதிலளிக்கவிரும்பவில்லை.
தி.மு.க என்பது ஜனநாயக அமைப்பு.தலைவர்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விரைவில்கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications