போன் மூலம் பாலிசி விவரம்: எல்.ஐ.சி திட்டம்
திருச்சி:
ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சென்னை கோட்டம் இந்த ஆண்டில் மக்களுக்கு 29.83.400 பாலிசிகளை விற்பனை செய்ததன் மூலம்
ரூ 16,020 அளவுக்கு வணிகம் புரிந்திருக்கிறது என எல்.ஐ.சி.யின் சென்னை கோட்ட மேலாளர் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தற்போது சென்னை கோட்டத்தில் 7,44,000 முகவர்கள் உள்ளனர். சென்னை கோட்டம் என்பதுதமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரள மாநிலங்களை உள்ளடக்கியது. இவற்றில் 12 பிரிவுகளும், 261 கிளை அலுவலகங்களும் உள்ளன.
இதில் 100 கிளை அலுவலகங்கள் எல்.ஐ.சியின் சொந்த கட்டிடங்களில் இயங்குகிறது. மற்ற கிளை அலுவலகங்களுக்கும் சொந்த கட்டிடங்கள் வாங்கும்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக வாடிக்கையாளர்கள் தங்கள் பாலிசி குறித்த தகவல்களை தொலைபேசி மூல ம தெரிந்து கொள்ள வசதி செய்யும் இன்டராக்டிவ் வாய்ஸ்ரெஸ்பான்ஸ் சிஸ்டம் என்ற நவீன முறையை தஞ்சாவூரில் துவக்கி வைத்து பானர்ஜி கூறுகையில், இனி தஞ்சை பிரிவின் கீழ் இயங்கி வரும் எல்.ஐ.சியில் பாலிசிஎடுத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பாலிசி குறித்த அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications