நற்சான்றிதழ் கொடுங்கள் .. கோ.சி.மணி
கோவை:
ஆதரவு தாருங்கள் எனக் கேட்கவில்லை, நற்சான்றிதழ் கொடுத்தால் போதும், ஆட்சி தொடர வாக்களியுங்கள் எனக் கூறவில்லை, மனசாட்சியுடன்நடந்து கொள்ளுங்கள் என்பது தான் எனது வேண்டுகோள் என மாநில உள்ளாட்சி துறை அமைச்சர் கோ.சி மணி பேசினார்.
பொள்ளாச்சியில் நடந்த கூட்டுக் குடிநீர் திட்ட விழாவில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கோ.சி மணி கலந்து கொண்டு பேசியதாவது:
பொள்ளாச்சியில் அதன் சுற்றுப் புற கிராமங்கள் பயனடையும் வகையில் ரூ 54 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் இந்தக் கட்டுக் குடிநீர் திட்டமதுவக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 53 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 17 ஆயிரத்து 501 குடிநீர் தொட்டிகள் தான் கட்டப்பட்டுள்ளது.
ஆனால் தி.மு.க பொறுப்பேற்றதிலிருந்து 96 ம் ஆண்டிற்கு பின்னர் மட்டும் 26 ஆயிரத்து 557 குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஆசியாவிலேயே பெரிய குடிநீர் திட்டமான பில்லூர் திட்டம் ரூ. 40 கோடியில் நிறைவேற்றப்பட்டது.
எனவே, நான் ஆட்சிதொடர வாக்களியுங்கள் எனக் கேட்கவில்லை, மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள் எனக் கேட்கிறேன். ஆதரவு தாருங்கள்எனக் கேட்கவில்லை, நற்சான்றிதழ் தாருங்கள் எனக் கேட்கிறேன் என்றார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் சந்தானம் முன்னிலை வகித்தார். மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications