தி.மு.க கையில் முடிவு: வெங்கையா நாயுடு
சென்னை:
த.மா.கா. வை தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைப்பதா, இல்லையா என்பது குறித்து தி.மு.க. தலைவர்கருணாநிதி தான் முடிவு செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சித் தலைவரும, மத்திய அமைச்சருமானவெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
இது குறித்தது அவர் நிருபர்களிடம் கூறுகையில் நான் த.மா.கா.வை வரவேற்க தயாராக இல்லை. இதுதி.மு.க.வினர் எடுக்க வேண்டிய முடிவு.
மூப்பனார் நாட்டின் நலனையும், அவரது கட்சியின் நலனை கருதியும் நல்ல முடிவெடுக்க வேண்டும் எனவிரும்புகிறேன்.மூப்பனார் என் நண்பர்தான். ஆனாலும் அவர் கேட்காமல் நான் அவருக்கு ஆலோசனை கூறமுடியாது.
தமிழக அரசியிலில் முக்கியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. தலைமை குறித்து தெளிவான நிலை நிலவுகிறது கூட்டணிகுறித்து தெளிவான நி நிலவுகிறது. எதிர்கால திட்டம் குறித்தும் தெளிவான நிலை நிலவுகிறது
தேர்தலின் போது தே.ஜ. கூட்டணி தே.ஜ.கூட்டணி நாட்டிற்கு ஆற்றியுள்ள நலப்பணிகள் பற்றியும், தமிழகத்தில்தி.மு.க. ஆற்றியுள்ள பணிகள் பற்றியும் விளக்குவோம்.
நாங்கள் எதிர்கட்சியின் சந்தர்ப்பவாத கூட்டணி குறித்தும் மக்களிடம் விளக்குவோம். கூட்டணி அமையும்ஒருவரை ஒருவர் எவ்வாறு குறை கூறினார்கள் என்பது குறித்தும் எடுத்துக் கூறுவோம்.
தேர்தல் குழு உறுப்பினர்கள் புதன்கிழமை திரும்பி வருவார்கள்.இரண்டொரு நாட்களில் தி.மு.க.வுடன் தொகுதிஉடன்பாடு குறித்து பேச்சு வார்த்தை நடத்துவோம். தொகுதி பங்கீடின் போது எந்த விதமான நிபந்தனையும விதிக்கமாட்டோம்.
பாண்டிச்சேரியில் சுழற்சிமுறையில் ஆட்சி அமைப்போம் என கூறியுள்ளது. மக்கள் அந்த இரு கட்சிகளையும் நம்பமாட்டார்கள். மேலும் உத்திரப்பிரதேசத்தில் இது போல் அமைக்கப்பட்ட அமைச்சரவை தோல்வி அடைந்ததுஎன்பதும் குறிப்பிடத்தக்கது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications