புத்தர் சிலையை உடைப்பது கீழ்த்தரமான செயல்
துபாய்:
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான் தீவிரவாதிகள் புத்தர் சிலையை உடைப்பதற்கு உத்தரவிட்டிருப்பது மிகவும் கீழ்த்தரமான, மனித நேயமற்ற செயல்என்று ஈரான் அதிபரும், இஸ்லாம் மதத் தலைவர்களில் ஒருவருமான முகமது காட்மாய் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
இஸ்லாமிய சட்டப்படி சிலை வழிபாடு கூடாது என்பதற்காக நாடு முழுவதுமுள்ள புத்தர் சிலைகளை உடைக்க தலிபான் தீவிரவாதிகள் உத்தர விட்டுள்ளனர். இதுமனித நேயமற்ற, நாட்டுப்பற்றற்ற செயலாகும். இஸ்லாம் விதிமுறைகளை மீறி செயல்படுகிறது தலிபான் அரசு.
இது கலாச்சாரைத்தையும், மரபுகளையும் மீறுவது போன்ற இழிவான செயலாகும். குரானில் ஒருபோதும் இது போன்ற செயல்களில் ஈடுபடுமாறுகூறப்படவில்லை.
இது இஸ்லாம் மதத்தினரிடையேயே பிரிவினையை உண்டு பண்ணும். இந்த வன்முறைச் செயல்களை தலிபான் நிறுத்தியே ஆக வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications