97 இடங்களில் போட்டி: தெலுங்கு சம்மேளனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் 97 இடங்களில் போட்டியிடப் போவதாக தமிழ்நாடு தெலுங்கு சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் திங்கள்கிழமை மாலை மாநாடு மற்றும் பேரணி நடந்தது. மாநிலத் தலைவர் கெங்குசாமி நாயுடு தலைமை வகித்தார். கடற்கரைசீரணி அரங்கில் நடந்த மாநாட்டில் கெங்குசாமி நாயுடு பேசுகையில்,
34 க்கும் மேற்பட்ட நமது சமுதாயப் பிரிவுகள் இன்று ஒன்று சேர்ந்துள்ளன. இது ஒரு புரட்சி. வீரபாண்டிய கட்டபொம்மன், முனுசாமி நாயுடு, ஓமந்தூர்ராமசாமி ரெட்டியார், ஜி.டி.நாயுடு, பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி ஆகிய சான்றோரை தமிழ் மண்ணுக்கு தந்தது நமது சமுதாயம்.
வரும் தேர்தலுக்குள் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் 97 இடங்களில் நாங்கள் போட்டியிடுவோம் என்றார்.முன்னதாக பெருந்திரளானோர் கலந்து கொண்ட பேரணியும் நடந்தது.












Click it and Unblock the Notifications