அமையுமா மூன்றாவது அணி?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மூப்பனார் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ், தமாகா வுக்கு 45 தொகுதிகள் தரத்தயார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் சென்னையில் உள்ள மூப்பனார் வீட்டில் தேர்தல் பணிக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமைநடந்தது.
இதில் ப.சிதம்பரம், தனுஷ்கோடி ஆதித்தன் தவிர மற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜெயலலிதாஅறிவிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. 3 வது அணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத்தும், மூப்பனாருடன் போனில் ஆலோசனை நடத்தினார். தமாகாவட்டாரத்தில் மூன்றாவது அணி அமைக்க ஆதரவு அதிகரித்துள்ளது. எனவே மூன்றாவது அணிக்கு மூப்பனார்பச்சைக்கொடி காட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications