விமான நிலையத்தில் திமுக தொண்டர் திருமணம்
சேலம்:
சேலம் விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தொண்டருக்கு திருமணம் நடத்தி வைத்தார் முதல்வர் கருணாநிதி.
முதல்வர் கருணாநிதி ஒரு நாள் சுற்றுப்பயணமாக சேலம் சென்றிருந்தார். அவருக்கு கமலாபுரம் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்ச்சிக்காக விமான நிலைய வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக முக்கிய பிரமுகர்கள்,தொண்டர்கள் ஆகியோர் க்யூ வரிசையில் நின்று முதல்வருக்கு பூச்செண்டு அளித்தார்கள்.
அப்போது சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த தொண்டர் உமாபதி மணமகள் பிரபாவதியுடன் மணக்கோலத்தில் மாலையுடன் விமானநிலையத்துக்கு வந்திருந்தார்.
அவர் முதல்வர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகக் கூறினார். இதையடுத்து முதல்வர் கருணாநிதி அவரையும், மணப்பெண்ணையும் மேடைக்குஅழைத்துச் சென்று அவர்களது திருமணத்தை நடத்தி வைத்தார்.
திருமணம் முடிந்த பிறகு இருவரும் முதல்வர் கருணாநிதி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications