கோவை குண்டுவெடிப்பு: பாஷாவுக்கு 4 ஆண்டு சிறை
சென்னை:
கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் வெடிகுண்டுகளை பதுக்கிவைத்தது தொடர்பாக அல்-உம்மா அமைப்பின் தலைவர் பாஷாவிற்கு 4 ஆண்டுகள்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை நகரில் 1998ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காலையில் 20 இடங்களில்தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் 60க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு அல்-உம்மா அமைப்புதான் காரணம் என்று தெரிய வந்தது.இதையடுத்து அன்று இரவே சென்னையில் உள்ள அல்-உம்மா அமைப்புத் தலைவர்பாஷா வீட்டில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் பாஷாவின் வீட்டில் வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பாஷா மற்றும் 12 பேர் மீது பூந்தமல்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டு, நீதிபதி நாகராஜன் வழக்கை விசாரித்து வந்தார்.
இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஷா உள்பட13 பேரும் ஆஜர் செய்யப்பட்டனர். நீதிபதி அவர்களிடம் நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர்கள் எனக் கேட்டார். அதற்கு எங்களை விடுதலை செய்ய வேண்டும்என்று பாஷா உள்பட 13 பேரும் கூறினர்.
இதையடுத்து தனது தீர்ப்பை நீதிபதி நாகராஜன் வழங்கினார். தீர்ப்பில், 120 (பி)பிரிவின் கீழ் 4 ஆண்டுகளும், 4 மற்றும் 5-வது பிரிவுகளின் கீழ் 4 ஆண்டுகள் மற்றும்ரூ.500 அபராதம், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 1 மாதம், 17 (1ஏ) பிரிவின்கீழ் 6 மாத சிறைத் தண்டனை அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனதுஉத்தரவில் கூறியுள்ளார்.
தீர்ப்பையடுத்து பாஷா உள்பட 13 பேரும் சென்னை மத்திய சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். நீதிமன்றத்திலிருந்து வெளியே கொண்டு போகப்பட்டபோது, இந்தத்தீர்ப்பு நிர்பந்தத்தால் கூறப்பட்டது. இதனால் ஆண்டவன் கோபமடைந்துள்ளார்.அதற்குத் தண்டனை கிடைக்காமல் இருக்காது என்று பாஷா ஆவேசமாககோஷமிட்டார்.












Click it and Unblock the Notifications