புத்தர் சிலைகளை மீண்டும் எழுப்ப இலங்கை உதவும்
கொழும்பு:
ஆப்கானிஸ்தான் பாமியானில் பீரங்கி குண்டுகள் வைத்ததுத் தகர்க்கப்பட்ட புத்தர் சிலைகளை மீண்டும் எழுப்பசர்வதேச நாடுகள் முன்வந்தால் இலங்கை நிதி உதவி செய்யத் தயராக உள்ளதாக அதிபர் சந்திரிகா குமாரதுங்காதெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐ.நா.சபை பொதுச் செயலாளர் கோபி அன்னனுக்கு, இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காஎழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பாமியானில் 125 அடியிலும், 174 அடியிலும் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய புத்தர் சிலைகளை ஆப்கானிஸ்தான்தலிபான் உத்தரவிற்கேற்ப, தலிபான் ஆதரவாளர்கள் பீரங்கி குண்டுகள் மற்றும் வெடிகள் வைத்துத் தகர்த்துவிட்டனர்.
மிகப்பெரிய இந்தச் சிலைகளை சரி செய்வதற்கும், மீண்டும் அதே இடத்தில் மலை முகடுகளில் புத்தர் சிலைகள்அமைப்பதற்கும் இலங்கை உதவி செய்யும். இதற்கு சர்வதேச நாடுகள் எடுக்கும் எந்த முடிவுக்கும் இலங்கைஒப்புதல் அளிக்கும். நிதியுதவி அளிக்கவும் இலங்கை தயாராக இருக்கிறது.
2000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த புத்தர் சிலைகளை அதே இடத்தில் மீண்டும் எழுப்ப உலக நாடுகள்தீர்மானித்தால் இலங்கை அதற்கு உதவி செய்யும் என்று தனது கடிதத்தில் கூறியுள்ளார் சந்திரிகா.
இலங்கையில் இருக்கும் மக்களில் 70 சதவீதம் பேர் புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் அதிபரும், தலிபான் தீவிரவாதிகள் தலைவருமானமுல்லா முகமது ஓமர், இஸ்லாமிய சட்டப்படி சிலை வழிபாடு கூடாது என்பதால் நாடு முழுவதிலுமுள்ள புத்தர்சிலைகளை தகர்த்து விடுங்கள் என்று உத்தரவிட்டார். இதையடுத்து தலிபான் ஆதரவாளர்கள் இந்தச் செயலில்ஈடுபட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, புத்தர் சிலை உடைப்பு குறித்து கடந்த வாரம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் கதிர்காமர்கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications