த.மா.கா வுக்கு 50 சீட் கொடுப்பாரா ஜெ?
சென்னை:
தமிழகத்தில் அ.தி.மு.க.தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் தேர்தல் கூட்டணி குழப்பம் தொடர்ந்து நீடித்துவருகிறது.
த.மா.கா.வும், காங்கிரசும் தொடர்ந்து கூட்டணி பற்றி யோசித்து வருவதால் அ.தி.மு.க. பொதுச் செயவாளர்ஜெயலலிதா கூட்டணி குறித்து எந்த விதமான திடமான முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்.
த.மா.கா.வும் காங்கிரசும் பாண்டிச்சேரியில் அ.தி.மு.க. கூட்டணி இல்லாமல் போட்டியிடுவதா அல்லதுபாண்டிச்சேரியில் முதல் இரண்டரை ஆண்டு கால ஆட்சியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்குமாறு அ.தி.மு.க.வைகேட்கலாமா என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தெரிகிறது.
த.மா.கா. தலைவர் மூப்பனார், காங்கிரஸ் சார்பாகவும், த.மா.கா.சார்பாகவும் ஜெயலலிதாவுடன் கூட்டணி குறித்துபேசி வருகிறார். அவர் சோனியா காந்தியின் கருத்துக்காக காத்திருக்கிறார். சோனியா காந்தி கூறியவுடன் அவர்இறுதி முடிவு எடுப்பார் என தெரிகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா த.மா.கா.வுக்கும், காங்கிரசுக்கும் 45 தொகுதி கொடுப்பதாக கூறியிருந்ததை மாற்றி 50தொகுதிகள் கொடுக்க சம்மதித்திருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாமக வுடன் உடன்பாடு:
தற்போது ஜெயலலிதா, பாட்டாளி மக்கள் கட்சியுடன் மட்டுமே தேர்தல் உடன்பாடு செய்து கொண்டுள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா 6 தொகுதிகள் ஒதுக்குவதாக ஜெயலலிதாகூறியுள்ளார். இந்த முடிவால் அந்த இரு கட்சிகளும் அதிருப்தி அடைந்துள்ளன.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மூப்பனாரை சந்தித்து மீணடும்பேசியுள்ளார்.மூப்பனார் இடதுசாரிகள் கட்சிகள் சம்மதித்தால் அவர்களுடன் இணைந்து மூன்றாவது அணிஅமைப்பது குறித்தும் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications