கூட்டணி சிக்கல் தீர காங்கிரஸ் புதிய யோசனை
சென்னை:
எந்தக் காரணத்துக்காகவும் பாண்டிச்சேரியில் ஆட்சியை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
நாங்கள் தான் அங்கு இப்போது ஆளும் கட்சியாக இருக்கிறோம், தனிப்பட்ட முறையிலும் பாண்டிச்சேரியில் பெரிய கட்சி காங்கிரஸ் தான். இதனால்,பாட்டாளி மக்கள் கட்சிக்காக ஆட்சியை விட்டுத் த முடியாது என காங்கிரஸ் கூறியுள்ளது.
தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் பா.ம.கவுக்கு 27 எம்.எல்.ஏ. சீட்களைக் கொடுப்பதாகக்கூறியுள்ள ஜெயலலிதா, பாண்டிச்சேரியில் இந்தக் கூட்டணி வென்றால் முதல் இரண்டரை ஆண்டுகள் பா.ம.க. ஆட்சியும் அடுத்த இரண்டரை ஆண்டுகள்அ.தி.மு.க. ஆட்சியும் நடக்கும் எனக் கூறியுள்ளார்.
ஆனால், த.மா.கவுடன் சேர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற முடிவு செய்துள்ள காங்கிரசுக்கு இந்தச் செய்தி இடியாய் இறங்கியுள்ளது.
தமிழகத்திலும் வெறும் 10 சீட் (த.மா.கவுக்கு 35, காங்கிரசுக்கு 10), பாண்டிச்சேரியில் ஆட்சியும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால்அ.தி.மு.கவுக்கு இனியும் சலாம் போடுவதில் அர்த்தமில்லை என்ற நிலையை காங்கிரஸ் எடுத்துள்ளது.
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியுடன் பாண்டிச்சேரி ஆட்சியை பகிர்ந்து கொள்ளவும் தான் தயாராக இல்லை எனஜெயலலிதாவிடம் காங்கிரஸ் தெரிவித்துவிட்டது.
பாண்டிச்சேரியில் த.மா.கவோடு சேர்ந்து நாங்கள் தனியாகவே போட்டியிட்டுக் கொள்கிறோம். அங்கு உங்கள் (அ.தி.மு.க.-பா.ம.க.) கூட்டணியேவேண்டாம் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், சோனியா குடும்பத்துக்கு நெருக்கமானவருமான மயிலாடுதுறை முன்னாள் எம்.பி. மணிசங்கர்அய்யர் கூறியுள்ளார்.
எந்த காரணத்தை கொண்டும் நாங்கள் பாண்டிச்சேரி ஆட்சியை இழக்க விரும்பவில்லை. பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சி சிறந்த பலம் பெற்று விளங்குகிறது.
பாரதிய ஜனதா கட்சி இடம் பெற்றுள்ள தி.மு.க. தலைமையிலான கூட்டணியை தோற்கடிப்பதே எங்கள் முக்கிய நோக்கம். அதே சமயம்பா.ம.கா.வுடன் ஆட்சி பங்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லை இதுதான் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்றார்.
இந்நிலையில், புதன்கிழமை காங்கிரஸ் பொதுச்செயலாளர்குலாம்நபி ஆசாத் கூறுகையில், தமிழகத்தில் த.மா.காவுக்கும் காங்கிரசுக்குமாக சேர்த்து 55தொகுதிகள் தரப்பட வேண்டும். இதில் த.மா.கா. 39 தொகுதிகளில் போட்டியிடும், காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடும்.
மேலும் பாண்டிச்சேரியில் சுழற்சி முறையிலான ஆட்சி திட்டத்தின்படி முதல் இரண்டரை ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். அதே சமயம்பா.ம.க.வுடன் ஆட்சி பங்கீடு என்பது கிடையாது என்றார்.
பாண்டிச்சேரியில், தற்போது காங்கிரஸ் கட்சிக்குத்தான் அதிக இடங்கள் இருக்கிறது. காங்கிரஸ் அங்கு பலம் பெற்று விளங்குகிறது. காங்கிரசையும்,பா.ம.க.வையும் சமமாக பார்க்கக்கூடாது என்றார்.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
மருமகள் சவுமியாவுக்கு எதிராக வேட்பாளரை அறிவித்த ராமதாஸ்.. வெளியானது 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ












Click it and Unblock the Notifications