மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம்
சென்னை:
தேர்தல் கூட்டணியில் நிலவும் சிக்கல் குறித்து விவாதிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடந்தது.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமணன் கூட்டத்திற்குத் தலைமைவகித்தார். மாநிலச் செயலாளர் சங்கரய்யா மற்றும் தலைவர்கள் வரதராஜன்,டி.கே.ராஜேந்திரன் மற்றும் மேலிடப் பிரதிநிதி ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொகுதிப் பங்கீட்டில் நிலவும் சிக்கல் குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.அடுத்தகட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது.
அ.தி.மு..க அணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10க்கும்குறைவான இடங்கள் ஒதுக்க ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உடன்பாடு இல்லை. கூடுதல்தொகுதிகளை அது கேட்டு வருகிறது.இதனால் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்நிலவுகிறது.












Click it and Unblock the Notifications