பாதிக்கப்பட்ட 36 மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுத அனுமதி
சென்னை:
அரசு அங்கீகாரம் பெறாத பள்ளியில் படித்ததால் ஹால் டிக்கெட் கிடைக்காமல் தேர்வுஎழுத முடியாமல் போன 36 பிளஸ் டூ மாணவர்களுக்கு தேர்வு எழுத சிறப்பு அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகள் இந்த மாதம் 5-ம் தேதி துவங்கியன. ஹால் டிக்கெட்கிடைக்காததால் 36 மாணவர்கள் தேர்வு எழுத இயலாமல் போனது.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் பரமசிவம் கூறுகையில்,
முதல் நாள் தமிழ் முதல் தாள் தேர்வு நடை பெற்றது இந்தத் தேர்வில் அரசு அங்கீகாரம்பெறாத பள்ளியில் படித்த 36 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை. இதனால்இவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனது.
இந்த மாணவர்கள் சென்னை அயனாவரத்திலிருக்கும் கிறிஸ்து ராஜா மெட்ரிகுலேஷன்பள்ளியிலும், திருச்சி காஜாமலையிலிருக்கும் சமது மேல் நிலைப்பள்ளியிலும் படித்தமாணவர்கள்.
இந்த இரண்டு பள்ளிகளுக்குமே அரசு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இங்குபடித்த மாணவர்களுக்கு தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் கிறிஸ்து ராஜா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 24 பேரும்புதன்கிழமை நடந்த தமிழ் இரண்டாம் தாள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.இவர்கள் தொடர்ந்து அனைத்து தேர்வையும் எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
சமது மேல்நிலை பள்ளி மாணவர்கள் 12 பேரும் தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள்தேர்வுகள் எழுதவில்லை. இவர்கள் வியாழக்கிழமை நடைபெறும் ஆங்கிலம் முதல்தாள் தேர்விலிருந்து தொடர்ந்து அனைத்து தேர்வுகளையும் எழுதஅனுமதிக்கப்படுவார்கள்.
இந்த 36 மாணவர்களும் எழுத முடியாமல் போன தேர்வுகளை எழுத அனுமதிஅளிப்பது பற்றி பின்னர் முடிவெடுக்கப்படவுள்ளது என்றார் பரமசிவம்.