ஹரிபாஸ்கர் மீது குற்றச்சாட்டு பதிவு
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக ரூ 72.44 லட்சம் சேர்த்த வழக்கில் தமிழக முன்னாள் தலைமைச் செயலர் என். ஹரிபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் 3பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது தனி நீதிமன்ற நீதிபதி தார்வேஷ் இந்தக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். ஹரிபாஸ்கர், அவரது மனைவி கோமதியம்மாள் உஷா தேவி,மகள் சித்ரா நாராயணி மற்றும் மருமகன் சுதிர். வி.ராஜன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்தார்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹரிபாஸ்கரின் உறவினர்கள் மீது ஏப்ரல் 11 ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார்.
ஹரிபாஸ்கர் மீது ஊழல் தடுப்புப் பிரிவுச் சட்டத்தின் கீழும், அவருக்கு உடந்தையாக இருந்தது தொடர்பாக அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதும்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
1986ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை தமிழக மின்வாரியத் துறை உயர் அதிகாரியாகவும், மாநில தலைமைச் செயலராகவும் ஹரிபாஸ்கர் இருந்தார்.தனது பதவிக் காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருமானத்துக்கு அதிகமாக தன் பெயரிலும், தனது உறவினர்கள் பெயரிலும் ஹரிபாஸ்கர் சொத்துசேர்த்திருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications